யாழ். பல்கலையின் பிரதித் துணைவேந்தர் நியமனம்!
Tuesday, June 18th, 2019யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறீசற்குணராசாவை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்படவுள்ளது என்று அறியமுடிகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி, உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பல்கலைக்கழக நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் பிரதித் துணைவேந்தர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
அதற்கமைவாக முன்னாள் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் சி.சிறீசற்குணராசாவை பிரதித் துணைவேந்தராக நியமிக்க தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது பரிந்துரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வேள்வித் தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்!
ஜுன் 7 இற்குப் பின்னர் பயணத்தடையை நீடிப்பது குறித்து மீளாய்வின் பின்னரே தீர்மானிக்கப்படும - பிரதி ச...
நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் - சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவிப்பு!
|
|