2,000 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Monday, June 6th, 2022

2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விநியோகம் நாளை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 3,500 மெட்ரிக் டன் லாஃப்ஸ் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்திருந்தது.

எனினும், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் விலை நேற்றுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00.0

Related posts: