யாழ். காரைநகர்ப் பகுதியில் 36 கிலோக் கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

Saturday, October 15th, 2016

யாழ். காரைநகர்ப்  பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  விசேட அதிரடிப் படையினர் 36 கிலோக் கிராம் கஞ்சாவுடன் இந்தியப்  பிரஜை உட்பட  மூன்று பேரை இன்று சனிக்கிழமை(15) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் காரைநகரைச் சேர்ந்தவர்களெனவும், மற்றைய நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் விசேட அதிரடிப்படையினர் ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  .

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணையின் பின் சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Drug_arrest_01_300-720x480

Related posts:


டொலர் நெருக்கடிக்கு தீர்வாக டிசம்பர் வரை சந்தைகளுக்கு புதிய சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – ...
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...
சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறு...