யாழ். இந்திய துணைத்தூதர் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு

Thursday, March 10th, 2016

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதர் அ.நடராஜனை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு ஒன்று சந்திப்பொன்றை மேற்கொண்டு கலந்துரையாடியுள்ளது..

யாழ்ப்பாணம் கோயில் வீதியிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று (10) இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன்(வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் ஜீவன், வலிகாமம் கிழக்கு பிரதேச இணைப்பாளர் ஐங்கரன், வலி தென் மேற்கு இணைப்பாளர் ஜீவா, காரைநகர் பிரதேச இணைப்பாளர் ரஜனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

indian 10.03.2016

Related posts: