தொற்றா நோய்களினாலேயே இலங்கையில் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன – வெளியான திடுக்கிடும் தகவல்!

Wednesday, June 7th, 2023

இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன.

ஆனால் தொற்று நோய்க்கு கொடுக்கின்ற கரிசனையை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியும் மாவட்ட தொற்றாநோய் விழிப்புணர்வு அதிகாரியுமான வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் நீரிழிவு புற்றுநோய் சிறுநீரகம் போன்ற தொற்றா நோய்களினாலேயே நாட்டில் 82 சதவீதமான மரணங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: