மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் – இல்லையேல் மீண்டும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Monday, November 1st, 2021

இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: