யாழ் இந்தியத் தூதுவராக எஸ்.பாலச்சந்திரன் !
Thursday, March 8th, 2018
யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவராக ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்
இன்று மாலை அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை இந்தியத் துணைத் தூதுவராக கடமையாற்றிய ஆ.நடராஜன் இன்று காலை டில்லி செல்லவுள்ளார் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள எஸ். பாலச்சந்திரன் தெலுங்கராக இருந்தாலும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர்.
இவர் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பு சீனாவின் ~ங்காய் மாநிலத்தின் இராஜதந்திர அதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!
இலங்கைக்கு அமெரிக்க நிறுவனம் உதவி!
மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் கற்றல் உபகரணங்கள் வழங்...
|
|
|


