உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை 3 ஆவது இடத்தில் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022

உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

194 நாடுகளை உள்ளடக்கியதாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் ஒரு நாடு என்ற வகையில் மக்களுக்குக் கிடைத்த மிக உயர்ந்த சாதனை இது என அமைச்சர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி மூலம் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நாட்டுக்கு மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பல நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டு வருவதாக வும், சில பிரச்சினை களை இனங்கண்டு தேவையான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!
இலங்கையின் உள்நாட்டு சந்தையில் புதிய எரிபொருள் சந்தை ஆரம்பம் - சினோபெக் நிறுவனத்துடன் மே மாதம் கைச்ச...
அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச...