நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, January 31st, 2022

நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இந்த திட்டத்தை மேற்கொள்ள முப்படையினர் ஈடுபடுத்தபடுவார்கள் என அவர் கூறினார்.

நாட்டில் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக பூஸ்டரை பெற்றுக்கொள்ள மக்கள் தாமதம் காட்டுவதாக கூறினார்.

தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ள காரணத்தினால் அனைவரும் விரைவிவாக பூஸ்டரை பெற்றுக்கொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: