யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Sunday, May 30th, 2021

யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்லஸ் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக  கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில்  பொதுமக்களை  கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு அரசினால் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா  தடுப்பூசிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக  கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நாடு பூராகவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது பணிப்பில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கு  50,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன..

இந்நிலையில் இன்றுகாலை 8 மணி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்களுக்கு கொரோனா  தடுப்பூசி வழங்கும் செயற்பாடு  முன்னெடுக்கப்படுகிறது

யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக அதிக அளவில் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்ட பிரதேசங்களில் 30 வயதிற்கு மேற்பட்டோர்  அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடக்கு மாகாண ஆளுநர், பிரதமரின் வடக்கிற்கான இணைப்பாளர், யாழ் மாவட்ட அரச அதிபர், நாளுமன்ற உறுப்பினர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், யாழ் போதனா வைத்திய சாலை வைத்தியர்கள், மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts:


திங்கள்முதல் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனை - சத்தியமூர்த்தி அறிவிப்பு!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம...
இரு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை –இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக...