யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு !
Wednesday, August 12th, 2020
இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வட கடல் பகுதிக்குள் வந்த அகதிகள் 4 பேர் யாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அவர்களில் ஒருவருக்கு நோய் வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (11) காலை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிராம அலுவலர்களாக நியமனம் பெற்றவர்களில் 24 பேர் கடமைகளை பொறுப் பேற்கவில்லை!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் விஷேட செய்தி!
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை - விசேட குழு இன்று கூடுகின்றது!
|
|
|


