இலங்கை – உக்ரேன் அரசாங்கங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஆணையகம்!

Saturday, May 12th, 2018

இலங்கை மற்றும் உக்ரேன் அரசாங்கங்களுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஆணையகம் ஒன்றை உக்ரேன் ஸ்தாபிப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவையின் அனுமதிகிடைத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே குறித்த திட்டத்தின் நகல் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பங்கு கொள்ளும் உக்ரேன் பிரதிநிதிகள் குழுவிற்கான அனுமதி கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவினால் (Petro Poroshenko) வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகளுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


இலங்கையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 824 ஆக உயர்வு - கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில்...
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 488 பேர் மீது வழக்கு - பொலிஸ் ஊடக பிரிவு!
கொரேனா பெருந்தொற்றை ஆன்மீக பலத்தினாலும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதாலும் வெல்லமுடியும் -...