மோட்டார் வாகன ஆணையாளருக்கு எதிராக விசாரணை!
Wednesday, August 10th, 2016மோட்டார் வாகான ஆணையாளர் நாயகத்துக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (எப்.சி.ஐ.டி.) சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தனது பதவிக் காலத்தின் போது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முதலாம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு பீ அறிக்கை ஊடாக பொலிஸார் நேற்று நீதிவானுக்கு தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம், அரச சொத்துக்களை தவறான வழியில் பயன்படுத்தி, தனது பதவி நிலையை உபயோகப்படுத்திக் கொண்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்துள்ளதாக இணையத்தளம் ஒன்றில் வெளியான அறிக்கையின் பிரகாரம், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் கடந்த 2015 டிசம்பர் 4 ஆம் திகதி நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்திருந்தார்.
அந்த முறைப்பாடு மீதான விசாரணைகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
Related posts:
|
|