அரச தொழில் அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!
Wednesday, November 2nd, 2016தமது கோரிக்கைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்படாமையினால் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் இன்று (02) முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.
சேவை யாப்பு தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடாத்தியும் தீர்வு கிட்டாததனால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.
முன்னர் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதியினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததனால் இன்று முதல் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவு - சுகாதார அமைச்சுடன் இணைந்த முதன்மை பராமரிப்பு ச...
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
238 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் - பெட்ரோலிய பிரிவி...
|
|