மொனிக்கா பின்ட்டோவின் அறிக்கை போலியானது – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ
Thursday, June 22nd, 2017
ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி திருமதி மொனிக்கா பின்ட்டோ இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை உண்மைக்குப்புறம்பானது.
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தொவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த அறிக்கை போலி தகவல்களை உள்ளடக்கியதாகும் என்றும் குறிப்பிட்டார்.
திருமதி பின்ட்டோ இலங்கையில் ஏழு நாட்கள் மாத்திரமே தங்கியிருந்தார். இத்தகைய குறுகிய காலப்பகுதியில் விடயம் அறிந்து, அறிக்கையை சமர்ப்பிப்பது சாத்தியமில்லை. இதனை அரச சார்பற்ற அமைப்புக்கள் தயாரித்திருக்கக் கூடுமென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் கூறினார்.
Related posts:
வலுவடைகின்றது காற்று! - வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
கடந்த 11 மாதங்களில் இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 196 இந்திய மீனவர்கள் கைது ...
ஜனாதிபதிக்கும் யு.எஸ்.எய்ட் பிரதானிக்கும் இடையில் தொலைகாணொளி ஊடாக கலந்துரையாடல்!
|
|
|


