வவுனியாவில் கோர விபத்து : 19 பேர் படுகாயம்!
Wednesday, July 25th, 2018வவுனியா – பூனாவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த 19 பேரும் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பெற்றோல் நிலையங்களுக்கு மீண்டும் பூட்டு?
குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் தீ விபத்து!
|
|