எரிபொருள் கொள்வனவிற்கு பணமில்லை – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Saturday, July 30th, 2022எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 150 மில்லியன் டொலர்களை கூட வழங்க முடியாது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, எரிபொருள் இறக்குமதிக்கு மாதாந்தம் தேவைப்படும் 550 மில்லியன் டொலர்களை மாற்று முறைகளை பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதுகூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீண்டும் சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்!
வாகன தட்டுப்பாட்டை போக்க உரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் - இறக்குமதியாளர்கள் சங்கம் யோசனை!
புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற...
|
|