ஜனாதிபதிக்கும் யு.எஸ்.எய்ட் பிரதானிக்கும் இடையில் தொலைகாணொளி ஊடாக கலந்துரையாடல்!
Saturday, October 12th, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் பிரதானி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தொலைகாணொளி ஊடாக நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கைக்கும் யு.எஸ்.எய்ட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்குத் தங்களது அமைப்பின் முழு ஆதரவு வழங்கப்படும் என சமந்தா பவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
சங்கானையில் வைத்து இ.போ.ச பேருந்து மீது தாக்குதல்!
அரச சேவையில் பட்டதாரிகள்!
2030 க்குள் டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பயன்பாடு நிறுத்தப்படும் - மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரு...
|
|
|


