மொத்த விற்பனையாளர்களுக்கு கொழும்புக்கு செல்ல அனுமதி – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!

Saturday, May 15th, 2021

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு நாளை 16 ஆம் திகதிமுதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, அவர் மேலும் கூறுகையில் –

பிரதேச செயலகங்களில் இதற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு, மொத்த விற்பனை நோக்கில் பொருட்களை கொள்வனவு செய்யவதற்காக மாத்திரம் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: