க.பொ.த உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Monday, March 16th, 2020கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இணையத்தள மூலம் விண்ணப்பிக்கும் கால எல்லை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் சேவையின் கீழ் பரீட்சை பெறுபேறுகளை பெறும் வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கை – யப்பான் இடையே உடன்படிக்கை கைச்சாத்து!
வெளிநாடுகளிலிருந்து மேலும் 371 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்!
மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதி...
|
|