தனது பிரஜைகளுக்காக ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பிக்க முடிவு!
Saturday, April 6th, 2024இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05 முதல் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் ஆகிய பகுதிகளில் முந்தைய தகவல்களைப் புதுப்பித்துள்ளது.
அதன்படி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு குறித்து முந்தைய ஆலோசனையில் இருந்த தகவல்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்.குடாநாட்டிலுள்ள மீனவர்களின் படகுகளுக்கு விசேட ஸ்ரிக்கர்கள் ஒட்டும் பணி ஆரம்பம்!
கொரோனா தொற்று: போலி மருந்துகள் சந்தையில்: எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!
2022 இல் இலங்கையில் 395 யானைகள் உயிரிழப்பு - சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டு...
|
|