யாழில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது!
Monday, March 18th, 2019செம்மணி பகுதியில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (17) இரவு 3 பேரும் 10 கிலோ கேரளா கஞ்சாவை கைமாற்றுவதற்கு வருகை தந்திருந்த போதே, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், 3 பேரையும் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்து உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
00000000000000
Related posts:
டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக முயற்சி - கல்வி அமைச்சு !
மீற்றர் வட்டி சட்டவிரோதமானது - யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!
அனர்த்தம் மற்றும் அவசர சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் வாகனங...
|
|