மேலும் ஒருதொகுதி பைசர் தடுப்பூசிகள் அதிகாலை நாட்டை வந்தடைந்தன – 56 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளும் விரைவில் வரும்!
Monday, July 19th, 2021அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி 70 ஆயிரத்து 200 பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்
இந்தநிலையில், குறித்த தடுப்பூசிகள் தற்போது விசேட லொறிகள் மூலம் களஞ்சியப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படகின்றது.
இதேவேளை, இலங்கைக்கு மேலும் 56 இலட்சம் சினோபாம் கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் வாரங்களில் வந்தடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் குறித்த தடுப்பூசிகள் மூன்று கட்டங்களாக நாட்டை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாகவும் இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|