அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள விசேட அமைச்சரவை கூட்டம்!
Saturday, October 15th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமைமையில் வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் நாட்டின் அரசியல் மற்றும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் கூட்டமொன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வாரத்தில் செவ்வாயன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதன் பின்னர் இந்த விசேட அரசியல் தீர்மானங்கள் எடுக்கும் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்ததாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த அரசியல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கு தரச் சான்றிதழ் அவசியம்!
யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
துன்புறுத்தப்பட்ட குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு!
|
|