எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தப்படுகின்றன கிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதிகள் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, May 14th, 2021

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலயவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லேக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் முதலான பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா காவல்துறை அதிகார பிரிவில், கிண்ணியா, பெரியகிண்ணியா, குட்டிக்கராச்சி, அல்தர் நகர், பெரியாத்துமனை, மலிந்தூர், ரஹுமானியான் நகர், சின்னகிண்ணியா, மண்வெளி, கட்டையாறு,  குறிஞ்சான்கேணி, முனைச்சேனை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தில், கிரிவுள்ள காவல்துறை அதிகாரி பிரிவின் ஹமன்கல்ல, நாரங்கொட வடக்கு, நாரங்கொட தெற்கு, பட்டபொதெல்ல, மல்கமுவ, தொடங்பொத்த மற்றும் நாரங்கமுவ முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: