முல்லைத்தீவில் இதுவரை 501 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, May 22nd, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் இதுவரை முல்லைத்தீவில் 501 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர்களில் 58 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் ஏனைய 443 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1310 குடும்பங்களைச் சேர்ந்த 5019 பேர் தனிப்பட்ட நிலையில் 768 குடும்பங்களைச் சேர்ந்த 2845 பேர் தனிமைப்படுத்தல் காலப்பகுதியை நிறைவு செய்துள்ளனர்.

ஏனைய 538 குடும்பங்களைச் சேர்ந்த 2153 பேர் தற்போதும் தனிமைப்படுத்தலில் உள்ளனர் இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் 443 நபர்களில் – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 23 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 75 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 342 பேரும், துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் ஒருவரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் இருவருமாக 443 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 58 நபர்களில் – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 02 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 13 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 16 பேரும், துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் 17 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் 10 பேருமாக 58 பேர் சிகிச்சை முடித்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவடடத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றாளருடன் தொடர்புகளை பேணியதன் அடிப்படையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 538 குடும்பங்களில் – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் 78 குடும்பங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 93 குடும்பங்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவில் 341 குடும்பங்களும், துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் 12 குடும்பங்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலகப்பிரிவில் 8 குடும்பங்களும், வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவில் 06 குடும்பங்களுமாக 538 குடும்பங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: