உலக நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று !
Monday, July 9th, 2018சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று(09) சிங்கப்பூரில் ஆரம்பமாகவுள்ளது. உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறான நகரத்தை உருவாக்குதல் என்பதே இந்த மாட்டின் தொனிப்பொருளாகும்.
6 ஆவது சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாடு மற்றும் அதனுடன் இணைந்ததாக நடைபெறவுள்ள சிங்கப்பூர் சர்வதேச வார நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(08) சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரதமர், பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இறக்குமதியான ரின் மீன்களின் 184 மாதிரிகளில் 149 நுகர்வுக்கு தகுதியற்றது - அமைச்சர் ராஜித !
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம்முதல் அமுலுக்கு வரும் - பொது நிர்வாக அமைச்சர் ...
|
|