முன்னாள் பிரதி அமைச்சரின் மகள் டெங்கு நோயினால் திடீர் மரணம்!
Thursday, January 18th, 2018
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சிறிபால கம்லத்தின் மகள் டெங்கு நோயால் உயிரிழந்துளள்ளார்.
ரஞ்சலா கம்பத் இலேபெரும என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழக்கும் போது அவரது வயது 35 ஆகும். ரஞ்சலா இரண்டு பிள்ளைகளின் தாயார் ஆவார்.
உயிரிழந்த ரஞ்சலா கம்லத்தின் உடல் கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு நேற்றுமுன்தினம் மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1237 முறைப்பாடுகள்!
தென்கொரியாவில் எந்தவொரு இலங்கையரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை - வெளிவிவகார அமைச்சு!
தொடரும் சீரற்ற காலநிலை – அறுவடைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு!
|
|
|


