அபிவிருத்தி குழு தலைவர்களாக கிளிநொச்சி – டக்ளஸ் தேவானந்தா – வவுனியா திலீபன் நியமனம்!

Wednesday, August 12th, 2020

இன்று கண்டியில் நடைபெற்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்துக்கான அபிவிருத்தி குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் வவுனியா மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.

இதன்படி புதிதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக நியமனம் பெற்றோர் விபரம் வருமாறு,

கொழும்பு  மாவட்டம் – பிரதீப் உதுகொட

கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான

களுத்துறை –  சஞ்சீவ எதிரிமான்ன

கண்டி மாவட்டம்-  வசந்த யாப்பா பண்டார

மாத்தளை மாவட்டம்-  எஸ். நாமக்க பண்டார

நுவரெலியா மாவட்டம் – எஸ். பி. திசாநாயக்க

காலி மாவட்டம் –  சம்பத் அத்துகோரள

மாத்தறை மாவட்டம்-  நிபுண ரணவக்க

ஹம்பாந்தோட்டை மாவட்டம் –  உபுல் கலப்பத்தி

யாழ்ப்பாணம் மாவட்டம் –  அங்கஜன் இராமநாதன்

கிளிநொச்சி மாவட்டம் – டக்ளஸ் தேவாநந்தா

வவுனியா மாவட்டம் – குலசிங்கம் திலீபன்

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் –  காதர் மஸ்தான்

அம்பாறை மாவட்டம் – டி. வீரசிங்க

திருகோணமலை மாவட்டம் –  கபில அத்துகோரள

குருநாகல் மாவட்டம் –  குணபால ரத்னசேகர

புத்தளம் மாவட்டம் – அசோக பிரியந்த

அநுராதபுரம் மாவட்டம்  – எச். நந்தசேன

பொலன்னறுவை மாவட்டம் – அமரகீர்த்தி அத்துகோரள

பதுளை மாவட்டம்  – சுதர்ஷன தெனிபிட்டிய

மொனராகலை மாவட்டம்  – குமாரசிறி ரத்நாயக்க

இரத்தினபுரி மாவட்டம் – அகில எல்லாவல

கேகாலை மாவட்டம் –  திருமதி ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: