மீண்டும் யாழில் ஆவாகுழு அட்டகாசம் – அச்சத்தில் மக்கள்!
Tuesday, July 9th, 2019கொக்குவில் பிடாரி கோவிலடி பகுதியில் நேற்று நள்ளிரவு தொடா்ச்சியாக 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு ரவுடிகள் வீடுகளை அடித்து நொருக்கியுள்ளனர்.
அத்துடன், வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாக உள்ள மூன்று வீடுகளில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.
3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வன்முறைக் கும்பல், வீடுகளின் படலை, யன்னல்கள் உள்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
44 பேருக்கு வெற்றிடம்: உயர் கல்வி அமைச்சு கண்டுகொள்ளவில்லை - கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி குற்றச...
வானிலை தொடர்பில் எச்சரிக்கை – வானிலை அவதான நிலையம்!
புத்தாண்டின் பின்னர் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறி...
|
|