மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்!

Wednesday, December 11th, 2019

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோரிற்கு மானிய அடிப்படையில் அரிசியினை வழங்குவதற்கு பாரிய அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நிதி பொருளாதரம் மற்றும் கொள்கை அபிவிருத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

இன்று (10) ஜனாதிபதி செயலயகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டரிசி ஒரு கிலோவினை 98 ரூபா உயர்ந்தபட்ச சில்லரை விலையிற்கும் சம்பா அரிசி ஒரு கிலோவினை 99 ரூபா உயர்ந்தபட்ச சில்லரை விலையிற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: