மாணவர்களுக்கான சீருடை விநியோகம் நாளை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, March 22nd, 2023இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை(23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் இந்த விநியோக நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டத்தில் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் 70 வீதமான மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை(23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மக்கள் இழந்தவை அனைத்திற்கும் அரசியல் இராஜதந்திரம் தெரியாத வெற்று வீராப்பு பேசுகின்றவர்களே காரண...
புதிய வழிகாட்டிகளுக்கு அமைவாகவே வணிக விமான சேவைக்காக நாடு திறக்கப்படுகிறது - சுற்றுலாத்துறை அமைச்சர...
திங்கட்கிழமைமுதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!
|
|