மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்!

Tuesday, December 29th, 2020

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் – ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், நாட்டுக்கு ஒரு மாகாண சபை அமைப்பு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: