சீனாவிடம் இருந்து இலங்கைக்கு பல பில்லியன் உதவி கிடைக்கும் – பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் நம்பிக்கை!

Friday, July 29th, 2022

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் முடிவடையும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் முடிவடைந்து சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கடன் உதவி மூலம், இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் டொலர் நிதி வசதியை செயற்படுத்துவதற்கும், 1.5 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: