மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறல்!.
Saturday, March 5th, 2022
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யுக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
அத்துடன் ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இதேவேளை வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
Related posts:
அத்தியாவசிய சேவையாகிறது ரயில் மற்றும் ஆசிரியர் சேவை – அனுமதி கொடுத்தது!
இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது அவசரகால நிலை – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறையாகும் வகையில் அதி...
அஸ்வெசும தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வேண்டும் - சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம...
|
|
|


