நிலவும் சீரற்ற வானிலை – 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்!
Tuesday, October 3rd, 2023நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்மேடு சரிவு மற்றும் பலத்த காற்று என்பவற்றினால் யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, கம்பஹா, காலி, புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது கொரோனா தொற்று : நாளாந்தம் நாடு முழுவதும் 6000 பி.சி.ஆர் பர...
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சமடைய வேண்டாம் - கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!
இந்திய வெளிவிவகார அமைச்சர் - வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சந்திப்பு – இருதரப்பு பொருளாதார...
|
|