மருந்துகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Sunday, July 16th, 2023மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் ஐந்து விசேட வைத்தியர்கள் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
புதிய குழு எந்தவொரு மருந்து அல்லது சுகாதாரத் துறை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைக்கான பரிந்துரைகளை வழங்கும் என கூறினார். இதேவேளை, மருந்துகளின் தரம் மற்றும் சுகாதாரத் துறையின் நிலைமை தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அதிபர்களுக்கான சுற்றறிக்கை வெளியானது!
சவுதி - இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
தொழில் திறன் நிறைந்த ஊடகத் தொழிலை உருவாக்க 'ஊடகக் கற்கை நிறுவனம் - அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்...
|
|