கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
Tuesday, November 7th, 2017மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், இன்று காலை- 08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை கிளிநொச்சியின் கெளதாரிமுனைப் பிரதேசத்திலும், காலை-08 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி மன்னார் மாவட்டத்தின் தாராபுரம் பிரதேசம், தாராபுரம் வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் குருக்கள் புதுக்குளம், குருக்களுர், பறயனாலங்குளம், நீலியா மோட்டை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வணசுந்தர!
தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டியில் இ.போ.ச. வட பிராந்தியம் சாதனை!
நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி ஊடக பிரிவு!
|
|