குடாநாட்டில் 60 வீதமான நெற் செய்கை தொடர் மழையால் அழிவு!
Saturday, November 11th, 2017
யாழ்.குடாநாட்டில் பெரும் போக நெற்செய்கை 60 வீதமானவை வெள்ளத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன..
தொடர்ச்சியாகக் கொட்டித் தீர்த்த கடும் மழையினால் நெற்பயிர்களில் பெரும்பாலானவை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக தாழ்ந்த வயல்நிலங்களில் செய்கையில் ஈடுபட்ட பயிர்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
மழை காலதாமதமாகப் பெய்தமையாலும் மற்றும் புழுதி விதைப்பு மூலம் செய்கையை மேற்கொண்ட பயிர்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இப்பயிரழிவு தொடர்பாக முழுமையான தரவுகளை மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட கிட்டத்தட்ட அறுபது வீதமான நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெற்பயிரழிவால் குடாநாட்டில் செய்கையாளர்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
Related posts:
எமது இளைம் சமூதாயம் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆணி வேர் கண்டறியப்பட வேண்டும் : மல்லாகம் ம...
சின்ன வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்!
பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி!
|
|
|


