மரக்கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமிப்பு!
Monday, May 7th, 2018
அரச மரக்கூட்டுத்தானத்தின் புதிய தலைவராக அனுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டார்.
அரசதலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாக அரசதலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரையும் கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது செயலரையும் சேவையிலிருந்து நீக்குமாறு அரச தலைவர் கடந்த வாரம் கூறியிருந்த நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்.
Related posts:
சிறுவர்களை விட அதிக நேரம் உழைக்கும் சிறுமிகள்: சொல்கிறது ஐ.நா. அறிக்கை!
இலங்கையுடன் வர்த்தக உடன்படிக்கை செய்வது தொடர்பில் நியுசிலாந்து கவனம்!
எகிப்தில் நடைபெறும் ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
|
|