மாணவி வித்தியா கொலை: மாவை எம்.பி யிடம் விசாரணை!
Monday, November 6th, 2017
வித்தியா படுகொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது. அதற்கு அவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண செய்தியாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தொடர்பாகவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
Related posts:
சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கி பிரயோகம்: எவரும் கைது செய்யப்படவில்லை!
விரைவில் சாரதி அனுமதிப் பத்திரம் மொபைல் தொலைபேசிகளில் அறிமுகம் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அற...
தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவ...
|
|
அமரர் பொண்னையா பாலகிருஸ்ணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
கொரோனா தொற்றின் வேகம் முன்னரை விட அதிகம் - தடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் -...
இலங்கையில் இரண்டு இலட்சத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் – கடந்த 3 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமா...