மாணவி வித்தியா கொலை: மாவை எம்.பி யிடம் விசாரணை!
Monday, November 6th, 2017
வித்தியா படுகொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது. அதற்கு அவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண செய்தியாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. அவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தொடர்பாகவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
Related posts:
நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் - மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம்!
அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவ...
காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பாய்மரப் படகுகள்!
|
|
|


