மனித உரிமை மீறல் ஆய்வுக்கான ஆணைக்குழுவின் பதவிகாலம் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!
Saturday, July 29th, 2023மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவி காலம் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கரமிசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விசாரணை ஆணைக்குழு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி நிறுவப்பட்டது.
அதன் பதவி காலம் இந்தமாதம் 21ம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து அந்த ஆணைக்குழுவின் பதவிகாலத்தை நீடித்து இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2024 இற்குள் அனைவருக்கும் நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்.
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!
மக்களையும் சமூகத்தையும் அறிந்திராதவர்களே எம்மீது அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர் - ஈ.பி.டி.பியின் ஊட...
|
|