மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த வேண்டாம் -கஜனின் தாய்!

Wednesday, November 2nd, 2016

அண்மையில் குழப்பிட்டியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களது உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந் நிலையில் குறித்த மாணவர்கள் தொடர்பிலும், மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பிலும் அண்மைய நாட்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள நடராசா கஜனின் தாயார் சரோஜினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிகையில்,

எனது மகனுக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது. எனது பிள்ளையின் பெயரை அவ்வாறு தொடர்புப்படுத்த நான் விரும்பவில்லை. எனவே, இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இனிமேல் எந்தவொரு பிள்ளைக்கும் இவ்வாறான ஒரு நிலை ஏற்படக் கூடாது. தெரிந்தோ தெரியாமலோ எனது மகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இதற்காக இச் சம்பவத்துடன், தொடர்புடையவர்களை கொலை செய்யுமாறு நான் கோரவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு, நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும். என தெரிவித்தார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90-1-275x200

Related posts: