புதிய கடவுச்சீட்டு அறிமுகம்!

Saturday, June 10th, 2017

புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய கடவுச்சீட்டை அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.எம்.ரணசிங்க குறிப்பிட்டார்.புதிய கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதுள்ள கடவுச்சீட்டு 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அந்த கடவுச்சீட்டு அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.எம்.ரணசிங்க சுட்டிக்காட்டினார்.

Related posts: