போராட்டக்காரர்கள் தங்கியுள்ள அலரி மாளிகைக்குள் மோதல் – பலர் காயம்!

Tuesday, July 12th, 2022

இலங்கையின் பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான, அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் இருவர் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த 9 ஆம் திகதி போராட்டக்காரர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி செயலகமும் அலரி மாளிகையும் ஆக்கிரமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கந்தர்மடம் பகுதி மக்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்...
நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் - மானியம்...
உள்ளூராட்சித் தேர்தல் 2023 -இவ்வாரம் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி முன்னெடுக்கப்படும் என எதிர்பார...