போதைப்பொருள் வர்த்தகர்களின் ஏராளமான நிதி – சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணை பிரிவு அதிகாரிகளால் பொறுப்பேற்பு!
Thursday, December 21st, 2023முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு அசங்க, லடியா மற்றும் குடு ஸ்ரீயானி ஆகியோர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சம்பாதித்த ஏராளமான பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணை பிரிவு அதிகாரிகள் இன்று (21) பொறுப்பேற்றுள்ளனர்.
இதன் கீழ், பின்வரும் சொத்துக்கள் மற்றும் பணம் தடைசெய்யப்பட்டு பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் 03 பேருந்துகள், 02 கார்கள், 02 மோட்டார் சைக்கிள்கள், மூன்று மாடி வீடு உட்பட 04 காணிகள், 50 பவுன் தங்கம், ரொக்கமாக 123,000 ரூபாய் பணம் என்பன பொறுப்பெற்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட சொத்து மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 92 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
44பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றம்!
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகப்பு - சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்...
யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவு - ஒக்ரோபர் 6 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கிறார் ப...
|
|