போதைப்பொருள் தொடர்பாக தகவல்கள் வழங்குவதற்கான விஷேட பிரிவு – பொலிஸ் தலைமையகம்!

Friday, October 26th, 2018

போதைப்பொருள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் முகமாக சிறப்பு நடவடிக்கை பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

போலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பங்குபற்றுதலுடன் இந்த சிறப்பு நடவடிக்கைகள் இடம்பெறுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சுpறப்பு நடவடிக்கைகள் பிரிவுக்கு தகவல்கள் வழங்குவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்- 011-3024820, 011-3024840, 011-3024850, பகஸ் இல- 011-2430912, 011-2472757 உடனும் மின்னஞ்சல் முகவரி sandsandpolice.lk என்பவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்ளலாம்.

போதைப்பொருள் தொடர்பாக முக்கியமான தகவல்களை வழங்குபவர்களின் விபரங்கள் பாதுகாக்கப்படுமென தெரிவித்த பொலிஸ் தலைமையகம் அவ்வாமறானவர்களுக்கு பரிசில்களும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்று குறிபிட்டுள்ளது.

Related posts: