ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வெளியிடங்களில் தங்கியுள்ளவர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது – இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Sunday, April 19th, 2020

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக தொழில் மற்றும் வேறு தேவைகளுக்காக வந்த ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் அத்தியவசிய சேவைகளுக்காக செல்லும் நபர்களுக்கு மாத்திரமே நாளைமுதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்றது எனவும், இதனால் ஏனைய அனைவரும் வீடுகளில் இருந்து அத்தியவசியமற்ற நடவடிக்கைகளுக்காக வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் இராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்

இதனிடையே இலங்கையில் 197 பேர் நேற்றும், நேற்று முன்தினமும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் 10 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


முல்லை மாவட்டத்தில் வடமாகாண ஆளுனருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு விசாரணைகள்  நடைபெற்றுள்ளது!
தண்ணீர்த் தொட்டிகளைக் கட்டாயம் 3 நாள்களுக்கு ஒருதடவை கழுவவும் - பிராந்திய சுகாதாரப் பிரிவு!
இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி விளையாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் - ஜனாதிபத...