ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் நல்லூரின் பல கிராமங்களுக்கு மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
Wednesday, November 30th, 2016கந்தர்மடம் தென்கிழக்கு பகுதியில் பாழடைந்த நிலையிலுள்ள வடிகால்வாயை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன் யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றையதினம் (30) யாழ் மாநகர சபை ஆணையார் பொ. வாகீசனை அவரது அலுவலகத்தில் சந்தித்த இரவிந்திரதாசன் குறித்த பகுதி மக்களது நிலைமைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களையும் எடுத்துக்கூறியதடன் அவற்றுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நல்லூர் வடக்கு, பண்டாரிக்குளம், கலட்டிச்சந்தி பிறவுண் வீதி, மாதவடி ஒழுங்கை, ஆத்திசூடி 5ஆம் வீதி பிறவுன் வீதி, பிராமனங்குளத்தடி வீதி, சபாபதி வீதி, கலட்டி இராமநாதன் வீதி கண்ணன் கடையடி, கச்சேரி – நல்லூர் பாணாங்களம் வீதிகளுக்கு வீதி மின் விளக்கு பொருத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பலம் இரவிந்திரதாசனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட யாழ் மாநகர ஆணையாளர் உடனடியாக குறித்த பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை மேமெற்கொள்வதற்கு அதிகாரிகளிடம் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது நல்லூர் மாநகரசைப நிர்வாக உறுப்பினர் தயாழினி உடனிருந்தார்.
Related posts:
|
|