போக்குவரத்தை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுங்கள் – இந்தியத் தூதுவரிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கோரிக்கை!
Friday, December 1st, 2023
நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் நேற்று நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு, நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார்.
இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கோரிக்கையினை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து, கலந்துரையாடியதன் பின்னர், அது தொடர்பான நடவடிக்கையினை எடுப்பதாக இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
000
Related posts:
ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 5ஆம் தர புலமைப்பரிசில்!
சமூகத்தை நல்வழிப்படுத்த அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் - சங்கானைக் கல்விக் கோட்ட அதிபர் ...
பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி மீண்டும் போராட்டம் - பங்களாதேஷில் 3 நாள்கள் பொது விடுமுறை!
|
|
|


